கேள்வி 27 : பயணத்தின் போது ஓதும் துஆவை குறிப்பிடுக?

பதில் :'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். "ஸுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்.வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்". அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக பீ ஸபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வமினல் அமலி மாதர்ழா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸபரனா ஹாதா, வத்வி அன்னா புஃதஹு, அல்லாஹும்ம அன்தஸ் ஸாஹிபு பிஸ்ஸபரி வல் கலீபது பில் அஹ்லி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் வஃஸாஇஸ் ஸபர், வகஆபதில் மன்ளரி, வஸூஇல் முன்கலபி பில் மாலி வல் அஹ்லி'. பொருள்: அல்லாஹு அக்பர்: அல்லாஹ் மிகப் பெரியவன் ( 3 தடவை) இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன். நிச்சயமாக நாம் எங்கள் இரட்சகனிடம் திரும்பிச்செல்வோராக உள்ளோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்!! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு இலகுபடுத்திடுவாயாக! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடுவாயாக! (இதன் தூரத்தை இலகுவாக கடக்கக்கூடியதாக ஆக்கிடுவாயாக!) யா அல்லாஹ்!! நீயே பயணத்தில் தோழனாகவும் எமது குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான காட்சிளிலிருலுந்தும், மேலும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

பயணத்திலிருந்து திரும்பி வந்தால் இந்த துஆவுடன் சேர்த்து பின்வரும் துஆவை ஓதவும் :

ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, லிரப்பினா ஹாமிதூன்'. பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர்களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். (ஆதாரம் : முஸ்லிம் .)