பதில் : 1- நான் எனது உடம்பில் வலியை உணரும் வேளை அவ்விடத்தில் எனது வலது கையை வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவைகள் கூறிவிட்டு ,((அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத்ரதிஹீ மின் ஷர்ரி மா அஜிது வஉஹாதிரு)) என்ற துஆவை ஏழு (7) தடவைகள் ஓதுவேன்.
பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் அவனது வல்லமையையும் முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீங்கிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) அஞ்சுகின்ற தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
2- அல்லாஹ் விதித்ததை திருப்தியோடு ஏற்று அதில் பொறுமையுடன் நடந்து கொள்வேன்.
3- எனது சகோதரன் நோயாளியாக இருந்தால் அவரை சுகம் விசாரிப்பதற்காக விரைந்து சென்று அவருக்காகப் பிரார்த்திப்பேன். (நேயாளியான எனது சகோதரருக்கு சிரமம் ஏற்படலாம் என்பதால்) அவரிடம் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருக்கமாட்டேன்.
4- நோயாளியின் வேண்டுதல் இன்றி அவர் சுகம் பெற ஓதி ஊதுவேன் - ஓதிப்பார்ப்பேன்.
5- நோயாளிக்கு பொறுமையை கைகொள்ளுமாறும் பிரார்த்தனை செய்யுமாறும் அவரின் சக்திக்கு ஏற்ப தொழுது சுத்தமாக இருக்குமாறும் அவருக்கு உபதேசம் செய்வேன்.
6- நோயாளியைப் பார்க்க செல்பவர் நோயாளிக்கு ஓத வேண்டிய துஆ : (அஸ்அலுழ்ழாஹல் அழீம் ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்பியக) என்று 7 தடவைகள் ஓதவேண்டும். துஆவின் பொருள் : மகத்துவமும் மாட்சிமையும் மிக்க அல்லாஹ்விடம் பிரமாண்டமான இறை சிம்மாசனத்தின் அதிபதியிடம் நான் உனக்கு ஆரோக்கியம் வழங்குமாறு வேண்டுகிறேன்.