கேள்வி 3 : ஸூறதுல் ஆதியாத்தை ஓதீ அதன் விளக்கத்தை குறிப்பிடுக?

பதில் : ஸூறதுல் ஆதியாத்தும் அதன் விளக்கமும் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

1. வல்ஆdதியாதி ழப்ஹா 2. fபல்மூரியாதி கdத்ஹா. 3. fபல்முகீராதி ஸுbப்ஹா. 4. fபஅஸர் னபிஹீ நக்ஆ. 5. fபவஸத்ன bபிஹீ ஜம்ஆ. 6. இன்னல் இன்ஸான லிரbப் bபிஹீ லகனூத். 7. வஇன்னஹு அலா தாலிக லஷஹீத். 8. வஇன்னஹு லிஹுbப் bபில் கைரி லஷdதீத். 9. அfபலா யஃலமு இஃதா bபுஃஸிர மாfபில் குbபூர். 10. வஹூஸ்ஸில மாபிஸ்ஸு dதூர். 11. இன்ன ரbப்பஹும் bபிஹிம் யவ்மஇஃதில் லகபீர். (ஸூறதுல் ஆதியாத் 1-11).

விளக்கவுரை (தப்ஸீர்) :

1- (மூச்சுத்தினற அதி வேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக !) இந்த வசனத்தில் அல்லாஹ் மிக வேகமாக மூச்சுத்தினற ஓடும் குதிரைகள் மீது சத்தியம் செய்துள்ளான். அவ்வாறு மிக வேகமாக ஓடும் வேளையில் அது மூச்சிரைக்கும் சப்தம் கேட்கும் என்று கூறுகிறான்.

2- (தீப்பொறிகளை பறக்கச்செய்பவற்றின் மீது சத்தியமாக!) மேலும் அல்லாஹ் மிக வேகமாக ஓடும் குதிரைகள் குளம்புகளை அடித்து ஓடும் போது அதன் குளம்புகள் பாரங்கல்லின் மீது பட்டு தீப்பொறியை ஏற்படுத்தும் குதிரைகளின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.

3- (அதிகாலை வேளையில் தாக்குதல் நடத்தும் குதிரைகளின் மீது சத்தியமாக) அதாவது எதிரிகளை அதிகாலையில் தாக்கும் குதிரைகளின் மீது சத்தியம் செய்கிறான்.

4- (புழுதிப் படலத்தை கிளப்பி விடுபவற்றின் மீதும் சத்தியமாக) அதாவது அக் குதிரைகள் அதன் ஓட்டத்தின் மூலம் புழுதியைக் கிளப்பி விடுகின்றன.

5- (அதன் மூலம் எதிரிப் படை நடுவில் நுழைந்து விடும் குதிரைகள் மீது சத்தியமாக!) அவைகள் எதிரிகளின் கூட்டத்தினுள் நடுவில் சென்று தாக்குதல் நடத்துகின்றன. அவ்வாறான குதிரைகள் மீது சத்தியமாக!.

6- (நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்). அதவாது உண்மையில் மனிதன் தனது இரட்சகன் விரும்புகின்றவைகளை பிறருக்கு கொடுக்காது தடுத்துக்கொண்டிருக்கின்றான் என்பதை இவ்வசனம் உணர்த்துகிறது.

7- (அதற்கு அவனே சான்றாகவும் உள்ளான்) அதாவது தன்னிடம் உள்ளவற்றை பிறருக்கு கொடுத்துதவாது தடுத்துக் கொள்ளும் இச்செயலுக்க அவனே சாட்சியாளனாக உள்ளான். இந்த விடயம் மிகத்தெளிவான விடயம் என்பதனால் அதனை ஒரு போதும் மறுக்க முடியாது.

8- (நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளான்). அதாவது தனது செல்வத்தின் மீதான மோகமானது அவனை நல்ல காரியங்களில் செலவளிக்காது கஞ்சத்தனம் காட்டுவதற்கு காரணமாக அமைகிறது.

9- (புதைகுழிக்குள் உள்ளவை வெளியே தள்ளப்படும் போது தனது நிலை குறித்து அவன் அறிய வேண்டாமா?). அதாவது உலக வாழ்வின் மோகத்தால் தற்பெருமை கொண்ட இந்த மனிதன் விசாரணைக்காவும் கூலி வழங்குவதற்காகவும் மண்ணறைகளிலிருந்து மரணித்தோரை பூமியிலிருந்து வெளியேற்றி மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பாட்டப்படும் போது அவன் உலகில் கற்பனை செய்தது போல் நிலைமை இருக்காது)? என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டாமா?.

10- (நெஞ்சங்களில் உள்ளவையும் வெளியாக்கப்படும்). அதாவது உள்ளங்களில் தோன்றிய எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகள் இவையல்லாத விடயங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டு எடுத்துக்காட்டப்படும் .

11- (அந்தாளில், நிச்சயமாக அவர்களது இரட்சகன் அவர்களைப்பற்றி நன்கறிந்தவனாக இருப்பான்.) இதன் கருத்தாவது : நிச்சயமாக அந்நாளில் அவர்களின் இரட்சகன் அவர்கள் பற்றி ஆழ்ந்தறிந்தவனாக இருப்பான். தனது அடியார்களின் விவகாரம் எதுவும் அவனின் அறிவிலிருந்து மறைந்து போகாது. ஆதலால் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏற்ப கூலி வழங்குவான்.