பதில் : அல்லாஹ் என்பதன் அர்த்தம் உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் என்பதாகும். அவன் தனித்தவன் அவனுக்கு இணையாளன் எவரும் கிடையாது.
அர்ரப்பு : (இரட்சகன்) என்பது படைத்து ஆட்சி செய்பவன், வாழ்வாதரத்தை வழங்கி, திட்டமிட்டு நிர்வகிக்கும் ஒருவன் என்பதைக் குறிக்கும்.
அஸ்ஸமீஉ : (நன்கு செவியுறுபவன்) அதாவது எல்லாவற்றிலும் அல்லாஹ்வின் செவியேற்கும் ஆற்றல் விரிந்து காணப்படுகிறது. ஆகையால் அவன் பல்வகையான வேறுபட்ட வித்தியாசமான அனைத்து சப்தங்களையும், ஓசைகளையும் கேட்கிறான் என்பது இதன் கருத்தாகும்.
அல்பஸீரு : (நன்கு பார்ப்பவன்) அதாவது, எல்லா விடயங்களையும் பார்ப்பவன். சிறிய பெரிய அனைத்து விடயங்களையும் நன்கு பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது இதன் கருத்தாகும்.
அல் அலீம் : (நன்கறிபவன்) என்பது, அல்லாஹ் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் பற்றிய அனைத்தையும் முழுமையாக அறிந்தவன் என்பது பொருளாகும்.
அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்பது, அவனின் அருளானது -கருணை- அனைத்து படைப்பினங்கள் மற்றும் உயிரினங்களை உள்ளடக்கியுள்ளது –ஆகவே எல்லா அடியார்களும் படைப்பினங்களும் அவனின் அருளின் -கருணையின்- கீழ்தான் உள்ளனர்.
அர்ரஸ்ஸாக் (வாழ்வாதாரத்தை வழங்குபவன்) : அதாவது அவனது படைப்புகளான மனித இனம், ஜின் இனம் மிருகங்கள் போன்ற எல்லாப் படைப்புகளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன் என்பது பொருளாகும்.
அல் ஹய்யு (நித்திய ஜீவன்) என்பது : மரணிக்காது உயிர் வாழ்பவன். அனைத்துப் படைப்பினங்களும் மரணித்துவிடும்.
அல் அழீம் (மகத்தானவன்): பெயர்கள், பண்புகள், செயல்கள் ஆகிய அனைத்திலும் மகத்துவமும் பரீபூரண நிலையும் அவனுக்கு –அல்லாஹ்விற்கு- மாத்திரமே உரியது.